திருச்சி, நவ. 24: டெல்லியில் வரும் 26, 27ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. 15 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 500 விவசாயிகள் இன்று காலை (24ம் தேதி) ரயிலில் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் வரும் 26, 27ம் தேதிகளில் இந்திய விவசாயிகள் சார்பில் போராடடம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப், அரியானா, குஜராத், டெல்லி உள்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 500 விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலை 7 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸில் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், டெல்லியில் வரும் 26, 27ல் போராட்டம் நடைபெறுகிறது.