திருச்சி, நவ. 24: திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள், இணைய வழியில் பெறப்படும் புகார்கள், வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காணும் வகையிலும் மேலும் காணாமல் போனவர்கள் பற்றிய புகார், அளிக்கப்பட்ட மனுதாரர்கள் மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு முகாம் நடத்தி நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் திருச்சி மாநகர அனைத்து சரகங்களிலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அதன்படி கன்டோன்மென்ட் மற்றும் பொன்மலை சரகத்திற்கு கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும், கோட்டை மற்றும் ரங்கம் சரகத்திற்கு தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் 99 மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.