திண்டுக்கல் திமுக பிரமுகர் கொலையில் கைதான 4 பேருக்கு குண்டாஸ்

திண்டுக்கல், நவ. 24: திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே கடந்த அக்.22ம தேதி திமுக பிரமுகர் சின்னப்பன் திவ்யராஜ் என்ற அருண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் ஜார்ஜ் (32), சபரி காந்தன் (29), பிரான்ஸிஸ் (36), செல்வகுமார் (23) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி ரவளி பிரியா, கலெக்டர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் 4 பேரும் குண்டாஸில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: