திண்டுக்கல், நவ. 24: திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா, கேரள அரசாங்கத்தை போல ரூ.6 லட்சம் செலவில் வீடு கட்டித்தர வேண்டும். என்.புதுப்பட்டியில் உண்டு உறைவிடப்பள்ளி கட்டித்தர வேண்டும். ரேஷன் கடை அமைக்க வேண்டும். கொடைக்கானல் வட்டம் கே.சி.பட்டி கூட்டப்பாறை ஆதிவாசி மக்கள் மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.