காரைக்குடி, நவ.23: காரைக்குடி செக்காலை முதல் வீதியை சேர்ந்தவர் பெரியமீனாள்(35). இவர் கடந்த மே மாதம் தெரிந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் பெரிய மீனாள் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.