வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஏகனாம்பேட்டை ஊராட்சி. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கோயில் குளங்கள் உள்ளன. இதனை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இதற்காக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திருவாலீஸ்வரர் கோவில் குளம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ₹ 24 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை ஆழப்படுத்தவும்,கரைகளை பலப்படுத்தும் பணி நடந்து முடிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக இக்குளம் முழுமையாக நிரம்பின. அதனால் குளத்தின் கரைகள் பலமிழந்து விரிசல்கள் ஏற்பட்டு கரைகள் ஒரு சில இடங்களில் அரிப்பு தன்மையுடன் காணப்படுகின்றன.