திருவையாறு.நவ.22: திருவையாறு சீனிவாசராவ்மேல்நிலைப்பள்ளியில் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்றது. இன்றும் நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட வாக்காளா் பட்டியல் பார்வையாளரும் தமிழ்நாடு அருங்காட்சியக ஆணையருமான சண்முகம், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்குதல், திருத்தம் ஆகிய விண்ணப்பங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் வேலுமணி, தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனா்.