ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

மதுரை, நவ. 22: மதுரை-திருப்பரங்குன்றம்  இடையே ரயில் தண்டவாளத்தில் பலத்த காயத்துடன் தலை துண்டாக்கப்பட்ட நிலையில்  ஒருவர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் உடலை மீட்டு,  பிரேதபரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்  50 வயது மதிக்கத்தக்க ஆண். யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம்  தெரியவில்லை. இதையடுத்து மதுரை காவல்நிலையங்களில் காணாமல் போனவர்கள்  குறித்து தரப்பட்டுள்ள மனுக்களின் பட்டியலை பெற்று ரயில்வே போலீசார்  விசாரித்து வருகின்றனர்

Related Stories: