நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

அலங்காநல்லூர். நவ. 22:  புதிய தமிழகம் கட்சி மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக  கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. அப்போது கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு  மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கண்ணுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பச்சையப்பன், மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் வெற்றி குமார், மூக்கையா, நாகமணி, சுமேஷ், இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த், மகளிரணி மாவட்ட செயலாளர் பிரேமா மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Related Stories: