சின்னாளபட்டி, நவ. 22: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் மணி வரவேற்றார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர்கள் தண்டபானி, நாகராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிலால் உசேன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்கள் ராமபுரம் ராஜா, கன்னிவாடி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.