நெல்லை, நவ.22: பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவக்கல்லூரியில் 2ம்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுரிகளில் 7.5% இடஒதுக்கீடு, சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று முடிவுற்றது. அடுத்ததாக பொதுபிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கும் நிலையில் பிலிப்பைன்ஸ் பெர்பெக்சுவல் மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு 2ம்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இக்கல்லூரியில் சேர அம்பை டாக்டர் சந்திரசேகர் மகன் விஜயபிரதீப் விண்ணப்பித்திருந்தார். அதை பரிசீலித்த மருத்துவ சேர்க்கை பொறுப்பாளர்கள் சாம் ஹெல்மன், வளவன் ஆகியோர் கலந்தாய்வில் பங்கேற்க பரிந்துரைத்தனர்