பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு அருகேயுள்ள தோனிரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் நைனியப்பன். இவரது மகள் சிவரஞ்சனி (23). காட்டாவூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (25) தனியார் நிறுவன ஊழியர். இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், திருப்பாலைவனம் கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர். மனைவியிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்தியுள்ளார். இதுபற்றி சிவரஞ்சனியின் பெற்றோர் சமரசம் செய்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது திடீரென அவர் வீட்டில் மர்மமான முறையில் சிவரஞ்சனி இறந்து கிடந்துள்ளார்.