திண்டுக்கல்லில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

திண்டுக்கல், நவ. 20: திண்டுக்கல்லில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஐபி.செந்தில்குமார் தலைமை வகிக்க, மாவட்ட அவைத்தலைவர் பஷீர் அகமது, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளரும், எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நவ.21, 22, டிச.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்க்கவும், நீக்கம்- திருத்தம் செய்வதற்கும் அந்தந்த வாக்குச்சாவடி முகவர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. இதில் நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,  திண்டுக்கல் யூனியன் சேர்மன் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், முன்னாள் சேர்மன் சந்திரசேகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள் சாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: