திண்டிவனம், நவ. 13: திண்டிவனத்தில் கூகுள் பே மூலம் நூதன முறையில் 55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் துரைசாமி ஆசாரி தெருவை சேர்ந்தவர் சுப்புராவ் மகன் பிரகாஷ் ஜாதவ் (45). இவர் மகாராஷ்டிராவில் உள்ள உறவினருக்கு அவரது மனைவி செல்போன் மூலம் 16 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார். இவர் அனுப்பிய 16 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். அதில் 6 ஆயிரம் ரூபாய் மட்டும் சென்றுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப முடியவில்லை. இதனால் அவர் கூகுல் பே கஸ்டமர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அவர், யார் வங்கிக்கணக்கிலிருந்து பணம் அனுப்பப்பட்டதோ அவர்களின் வங்கி முழு விபரம் கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் ஜாதவ் மனைவியின் தொலைபேசி எண்ணை கொடுத்து இதற்கு தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.