திருக்கனூர், நவ. 13: திருக்கனூர் அருகே பட்டப்பகலில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்து பைக்கில் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த பாலு மகள் சுகந்தி (20). இவர் திருக்கனூர் மெயின் ரோடு சித்தலம்பட்டில் உள்ள ஒரு ரத்தப்பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், வேலைக்கு செல்வதற்காக திருக்கனூர் பிள்ளையார் கோயில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது எதிரே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த வாலிபர், திடீரென சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.