நெல்லிக்குப்பம் பகுதியில் 4 கடைகளில் கைவரிசை

நெல்லிக்குப்பம், நவ. 12: நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் கடலூர்- பண்ருட்டி சாலையில் துணிக்கடை நடத்தி வருபவர் கமால் மகன் ஆசிப் (30). இவரது கடையின் அருகே பால் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் சர்புதீன் மகன் முகம்மது ராஜா (45). இதன் அருகே மாருதிநகரைச் சேர்ந்த பாரூக் மகன் அகர் அலி பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் தங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை கடைகளுக்கு சென்று பார்த்தபோது 3 கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றிய தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த 3 கடைகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துணிக்கடையில் இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மற்றும் பால் விற்பனை கடையில் 5 ஆயிரம், ஓட்டலில் 2 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.   இதேபோல், நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி பகுதியில் திருப்பூர் நாற்றாம்பள்ளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கமலக்கண்ணன்(34) என்பவர் ஐயங்கார் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்  இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 4 ஆயிரத்தை திருடி சென்றனர்.

Related Stories: