திருவள்ளூர், நவ.10: திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பொன்னையா வௌியிட்ட அறிக்கை:பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், பணிப்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை மாவட்டத்தின் www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.