தா.பழூர் நவ.9:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில், அரியலூர் ஒன்றிய வேளாண்மை துறை தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2020-21 கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு தா.பழூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) நல்லமுத்து வரவேற்றார். வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி பயிற்சிக்கு தலைமை வகித்து பேசினார். மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் பயிற்சியின் நோக்கம் பற்றி விரிவாக கூறினார்.