ஓட்டப்பிடாரம், நவ. 9: ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் புதிதாக ரூ, 26 லட்சம் மதிப்பிலான சூரிய ஒளி உயர் மின் கோபுர விளக்குகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமடம், முப்புலிவெட்டி, கீழ்பகுதி, மேல்பகுதி, தெற்கு பரும்பூர் ஆகிய 4 இடங்களில் தலா ரூ,6.50 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ. 26 லட்சம் மதிப்பிலான உயர் கோபுர சோலர் மின் விளக்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இயக்கிவைக்கப்பட்டது.