அரசு பெண்கள் பள்ளி மாணவி சாதனை

கம்பம், மே 12: கம்பத்தில் உள்ளது ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இப்பள்ளி மாணவி வைஷ்ணவி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும் தேனி மாவட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். மேலும் இப்பள்ளி மாணவி கார்த்திகா 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவி தர்ஷணபிரியா 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி மற்றும் இருபால் ஆசிரியர், பெற்றோர்கள், பாராட்டி வாழ்த்தினார்கள்.

The post அரசு பெண்கள் பள்ளி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: