நத்தம், நவ. 6: நத்தம் அருகே, வாலிபர் கொலை வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ஸ்ரீகாந்த் (18), சென்னையில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கழுத்து அறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். நத்தம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து வாலிபரின் நண்பர்கள், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து கொலையாளியை தேடி வந்தனர்.