பொள்ளாச்சி, நவ. 6: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்தாலும் முறையாக விதிமுறையை கடைபிடித்தால், கொரோனாவை முழுமையாக தடுக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் இவ்வேளையில், வர்த்தக நிறுவனங்களில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, முகவசம் அணியாமலும். அரசின் விதிமுறை முறை மீறுவோருக்கும் அபராத நடவடிக்கையை மீண்டும் துரிதப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று, நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், போலீசார் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.