பஞ்சு மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைப்பு

 

கோவை, ஜூன் 8: தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜவுளித்துறை தொடர்புடைய, அனைத்து செயற்கை பஞ்சு மூலப்பொருட்கள் இழைகள் மற்றும் நூலிழைகள் மீது குவிப்பு வரிகளை நீக்கி, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும், வெற்றி உத்தியை பெற செயற்கை பஞ்சு மீதான இறக்குமதி வரியை 5 சதவீதமாக குறைப்பது என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளை சைமா வரவேற்கிறது.

இருப்பினும், மூலப்பொருட்களின் மீது விதிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு உத்தரவு, தொழில்துறையின் செயல்திறனை சிதைத்துள்ளது. பருத்திக்கு இணையாக 5 சதவீத ஜி.எஸ்.டி விகிதத்தின் கீழ் முழு செயற்கை பஞ்சு மதிப்பு சங்கிலியையும் கொண்டுவர வேண்டும். மேலும், மூலப்பொருட்களின் சீரான விநியோகத்தை உறுதிசெய்து, வரி திரும்ப பெறுதலில் உள்ள பிரச்சினை உள்பட செயற்கை பஞ்சு தொடர்பான அனைத்து கட்டமைப்பு சிக்கல்களையும் தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

செயற்கை இழை ஜவுளி மதிப்பு சங்கிலியை 5 சதவீத ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதால் அரசின் வருவாய் பாதிக்காது. அதே நேரத்தில், நாட்டில் உள்ள ஏழை மக்கள், மலிவு விலையில் ஜவுளி வாங்க முடியும். மேலும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கினால், பருத்தி மற்றும் பருத்தி கலந்த ஜவுளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியில் தங்கள் பங்கை இன்னும் அதிகரிக்க முடியும். இதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post பஞ்சு மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.