திமுக அமோக வெற்றி சோமனூரில் கொண்டாட்டம்

 

சோமனூர், ஜூன் 5: தமிழகத்தில் இந்தியா கூட்டணி அபாரமாக வெற்றி பெற்று 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்று சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.  கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி.சந்திரசேகர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பின்பு வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழக முழுவதும் வெற்றி பெற வியூகம் அமைத்து தேர்தல் பணி ஆற்றி இந்தியாவே திரும்பிபார்க்கும் விதமாக சிறந்த வெற்றியை பதிவு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மத்தியில் சிறந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்து மக்களிடம் கொண்டு சென்ற அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து கிட்டாம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் விஎம்சி.சந்திரசேகர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

The post திமுக அமோக வெற்றி சோமனூரில் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.