கோவைக்கு தேவையான திட்டத்தை பெற்று தருவேன்

 

கோவை, ஜூன் 5: கோவை வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவருக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அதற்கு நேர் மாறாக தேர்தல் முடிவு வந்துள்ளது. அது 2நாள் நடத்தப்பட்ட ஒரு டிராமா. சஸ்பென்ஸ் கொடுத்தார்கள். அது தவிர வேறொன்றுமில்லை. இந்தியா முழுக்க இதுதான் நிலைமை.  கோவையில் அத்தியாவசிய பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

விமான நிலைய விரிவாக்கம், கோவை ரயில் நிலைய மேம்பாடு, மெட்ரோ திட்டம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டி உள்ளது 15, 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவை ரயில் நிலையம் அப்படியே உள்ளது. எந்த மேம்பாட்டு பணியும் நடைபெறவில்லை. இதை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கோவைக்கு தேவையான திட்டங்களை பெற்று தருவேன். கோவையில் ஜிஎஸ்டி காரணமாக தொழில்கள் வெகுவாக நலிவடைந்துவிட்டன. பாஜ ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. அதிமுக மூன்றாவது இடம் பெற்றதற்கு கட்சியின் செயல்பாடுதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவைக்கு தேவையான திட்டத்தை பெற்று தருவேன் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.