பெரும்புதூர்: தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், 26 பேரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (22). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு, இவரது உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, குன்றத்தூர் அருகே தர்காஸ் பகுதியில் நடந்தது. அதில் பங்கேற்று விட்டு அபிஷேக், பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.