வேலூர், நவ. 1: வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழந்தார். வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(57), சாராய வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைபார்த்த அறையில் இருந்த கைதிகள் கூச்சலிட்டனர்.