தூத்துக்குடி, அக். 30: இன்று கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தூத்துக்குடியில் 113வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை வகித்த எஸ்பி ஜெயக்குமார் பல்வேறு அறிவுரைகள் வழங்கிப் பேசினார். ஏடிஎஸ்பிகள் கோபி, செல்வன், 10 டிஎஸ்பிகள், 44 இன்ஸ்பெக்டர்கள், 123 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையோரங்களில் 15 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல் அனைத்து உட்கோட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. இது தவிர ‘டெல்டா’ என்னும் 6 அதிரடிப்படையினர் மற்றும் ‘ஆல்பா’ என்னும் 8 அதிரடிப்படையினர் அடங்கிய காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.