விளையாட்டு விபரீதமானது 5 வயது சிறுவன் பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடியதால் மூச்சு திணறி சாவு

திருத்தணி: வீட்டில் தனியாக இருந்த, 5 வயது சிறுவன் ஒன்று  விளையாட்டாக பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடியதால் மூச்சு திணறி இறந்தது.திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் (35). இவரது மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு தனம் (6) என்ற மகளும், சுஜித் (5) என்ற மகனும் உள்ளனர். பூபாலன் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பூபாலன் வேலைக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று மாலை, 4:30 மணிக்கு சங்கீதா தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டு உறவினரை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. சுஜித், தனம் ஆகிய இருவரும் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சுஜித் வீ்ட்டில் இருந்த பிளாஸ்டிக் கவரால் தலை மற்றும் முகத்தை மூடி விளையாடி கொண்டிருந்தான். பின் கவரை முகத்தில் இருந்து எடுக்காமல் முடியாமல் மூச்சு திணறி சுஜித் மயங்கி விழுந்தான்.

 தம்பி இறந்ததை அறியாமல் தனம் விளையாடிக் கொண்டிருந்தார். மாலை, 6 மணிக்கு வீட்டிற்கு வந்த சங்கீதா பிளாஸ்டிக் கவருடன் சுஜித் மயங்கி விழுந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சுஜித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: