30 சதவீதம் போனஸ் கேட்டு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக். 29: மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். போராடி பெற்ற உரிமைகளான எஸ்எல்எஸ், பஞ்சப்படி உள்ளிட்டவை பறிப்பதை கைவிடவேண்டும். ஆரம்ப கட்ட பதவிகளை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) வட்ட கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ராஜகுமாரி விளக்க உரையாற்றினார். கோட்ட நிர்வாகிகள் நல்லுசாமி, கண்ணன், காசிநாதன், செல்வகுமார், சிஐடியூ மாவட்ட நிர்வாகி சண்முகம் பங்கேற்றனர்.கோட்ட செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Related Stories: