பெரம்பலூர், அக். 29: தன்னிச்சையாக செயல்படும் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது அன்னமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக மருதாம்பாள் செல்வகுமாரும், துணைத்தலைவராக அனுசியாமேரியும் உள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக 2ம் தளத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசனிடம் அன்னமங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் அனுசியாமேரி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் பிரபாவதி, குதரத்துல்லா, ரேவதி, கரோலின் ரூபி, உமா, ராஜேந்திரன், செலின்மேரி, கலையரசி, பனமலை உள்ளிட்ட 10 பேர் வந்து புகார் மனு அளித்தனர்.