ஒன்றியக்குழு தலைவர் காலமானார்

சேந்தமங்கலம், அக்.28: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவராக, அதிமுகவை சேர்ந்த வரதராஜன் (77) இருந்து வந்தார். இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 49 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம், அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வரதராஜன் எருமப்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார்.

Related Stories: