சுரண்டை, அக்.23: சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.88 லட்சம் கல்வி உபகரணங்களை செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார். சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி தேசிய தரவரிசை சான்றிதழ் பெறும் பொருட்டு கல்லூரி கல்வித்துறை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மரத்தளவாடங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி தலைவர் தங்கையா முன்னிலை வகித்தார். கணிதத்துறை தலைவர் ஜெயா வரவேற்றார். தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ரூ.88 லட்சம் மதிப்புள்ள மரத்தளவாடங்கள் மற்றும் கணினி உபகரணங்களை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.