கரை புரண்டு ஓடும் தண்ணீர் ஒரத்தநாடு அருகே ஓட்டல் சப்ளையரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

ஒரத்தநாடு, அக். 23: ஒரத்தநாடு அருகே நடந்த தகராறில் ஓட்டல் சப்ளையரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரத்தநாடு அருகே ஏழாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (34). இவர் வாட்டாத்திகோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது அங்கு தோப்புநாயக்கன் பகுதியை சேர்ந்த மாட்டு தரகரான செல்வம் (55) சாப்பிட வந்தார். அவர் அரை சாப்பாடு கேட்டுள்ளார். அரை சாப்பாடு என்றால் பார்சல் தான் தர முடியும் என்று சரவணன் கூறியதால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வத்தை சரவணன் தாக்கினார். இதையடுத்து செல்வம் ஊருக்கு சென்று 10க்கும் மேற்பட்டோருடன் வந்து சரவணனை தாக்கினர். இதில் காயமடைந்த சரவணன் அளித்த புகாரின்பேரில் செல்வம், சித்ரவேல், முருகானந்தம், முருகேசன், செல்வராஜ் மற்றும் ஒருவர் மீது வாட்டாத்திகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: