அறந்தாங்கி, அக்.23: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.20 லட்சம் ரொக்கப்பணம், 66 கிராம் தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆண்டுதோறும் ஒருமாத காலம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால், திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் வீரமாகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய தொகை, கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி திறந்து எடுக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 20ம்தேதி கொரோனா பரவலால் கோயில் மூடப்பட்டு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டது.