நாமக்கல், அக்.22: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. கடந்த 2 மாதமாக தினமும் 150 முதல் 170 வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், அரசு அலுவலக ஊழியர்கள் என 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வருவாய்த்துறையில் பணியாற்றி வந்த ஒரு தாசில்தார் கொரோனாவால் உயிரிழந்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர், பிஆர்ஓ, கலெக்டரின் டபேதார், பிடிஓக்கள் என நோய் தடுபபு பணியில் தீவிரமாக ஈடுபட்ட வந்தவர்களும் தொற்றுக்கு ஆளாகி தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.