எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

கீழக்கரை, அக்.22:  கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் துணைத் தலைவர் சுலைமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் பற்றி விரிவாக விவாதித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் வேட்பாளரை அறிமுகம் செய்யும் கூட்டம் அதிவிரைவில் நடத்தப்பட வேண்டும். தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் நிதிக்கான முதல் காசோலையை மாவட்ட பொருளாளர் அசன் அலியிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜ்மல் சரிபு வழங்கினார்கள். உடன் மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் பொதுச்செயலாளர் பரகத்துல்லாஹ் செயலாளர்கள் பைரோஸ்கான் மற்றும் இஸ்ஹாக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: