மன்னார்குடி, அக்.22: மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடை பெற்றது. மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தோற்று தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக மன்னார்குடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை நிலைய அலுவலர்கள் பாலசுப்ரமணியன், மானெக்சா (போக்குவரத்து) ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜகோபாலசுவாமி கோயில் அருகே நிறைவடைந்தது. இதில் திரளான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை வாசகங்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.