திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் குப்பத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (30). மீனவர். இவருக்கும் தென்பட்டினம் குப்பத்தை சேர்ந்த ராணி (எ) நந்தினி (25) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமணமானது. கடந்த 8ம் தேதி காலை ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மதியம் அவர் வீடு திரும்பியபோது, ராணி மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.