திருப்பரங்குன்றத்தில் இன்று அம்பேத்கார் மக்கள் இயக்க மாநில பொதுக்குழு

மதுரை,  அக். 21:  அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஜங்ஷன்  அண்ணாதுரை அறிக்கை: அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவரும், சென்னை முன்னாள் மேயருமான வை.பாலசுந்தரத்தின் நினைவேந்தல் மற்றும் தலைமை  நிலைய பொதுக்குழு கூட்டம் அக்.21 (இன்று) மதுரை திருபரங்குன்றத்தில்  நடக்கிறது. இங்கு மதுரை தேங்காய், பழம் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடக்கும் பொதுக்குழுவிற்கு மாநில துணைத்தலைவர்கள் ஜெயராமன்,  ஆசீர்வாதம், துரை தலைமை வகிக்கின்றனர். இயக்க பொதுச்செயலாளர் மகா.  ராமகிருஷ்ணன் வரவேற்கிறார். மாநில செயலாளர்கள் ராமலிங்கம், முருகன்,  காளிமுத்து, பொருளாளர் சாமிக்கண்ணு உள்ளிட்டோர் பேசுகின்றனர் அனைத்து அணி  நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: