கோவை, அக். 20: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் அலுவலர்களிடம் தெரிவித்ததாவது: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள், பூங்காக்கள் அமைக்கும் பணி, மாதிரி சாலைகள் அமைக்கும் பணி, பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.