பஸ் மீது மோதி இறந்த மயில்

மதுரை, அக்.18: திருமங்கலத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம் நோக்கி நேற்று அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ், ஆண்டாள்புரம் மேம்பாலத்தில் இருந்து பெரியார் நிலையம் சென்றபோது, கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து ஆண் மயில் ஒன்று நந்தவனத்தில் இருந்து பறந்து வந்தது. அந்த மயில், சற்றும் எதிர்பாராத வகையில், பஸ் மீது மோதியது. இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இச்சம்பவத்தில், மயில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார், இறந்த மயிலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: