திருச்சியில் பலத்த மழை பள்ளி அலுவலகத்தில் பதுங்கிய சாரைப்பாம்பு

முசிறி, அக். 18: முசிறி அருகே துலையாநத்தத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிக்கு வந்து அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்பள்ளி அலுவலகத்தில் சாரைப்பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்தது. இதை பார்த்த அலுவலக ஊழியர்கள், முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வீரர்கள் வந்து பீரோவை நகர்த்தி பதுங்கியிருந்த சாரைப்பாம்பை பிடித்தனர்.

Related Stories: