கரூர் ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு தற்காப்பு பயிற்சி

கரூர், அக். 18: கரூர் ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு தற்காப்பு பயிற்சி நடைபெற்றது. திருச்சி சரகத்தில் உள்ள அனைத்து ஆயுதப்படை போலீசாருக்கும் தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் நேற்று காலை கரூர் ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை போலீசாருக்கு கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான போலீசார் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.

முன்னதாக தற்காப்பு பயிற்சி நடைபெறுவதை கரூர் மாவட்ட எஸ்பி பகலவன் பார்வையிட்டார்.

Related Stories: