அரியலூர், அக்.16: செந்துறை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள மணக்குடையான் ஊராட்சியில், ஊரகவளர்ச்சித்துறையின் சார்பில் கனிமவள மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் தாமரைப்பூண்டி காலனியில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செந்துறை ஒன்றியம், மணக்குடையான் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, தாமரைப்பூண்டிகாலனியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை நேரில் பார்வையிட்டு, பணிகள்தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.