தேனி அக். 2: தேனி மாவட்ட திமுகவில் ஆண்டிபட்டி, கம்பம் சட்டமன்ற தொகுதிகள் தெற்கு மாவட்டமாகவும், பெரியகுளம், போடி தொகுதிகள் வடக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் என்.ராமகிருஷ்ணனையும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க.தமிழ்செல்வனையும் நியமித்து திமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க.தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்று, தேனி நகர திமுக இளைஞரணி சார்பில், நகர இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ரவிக்குமார் தலைமையில், தேனி நேரு சிலை அருகே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சின்னத்துரை, சதீஷ், வார்டு நிர்வாகிகள் ஆண்டி, தெய்வேந்திரன், பால்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் ஒன்றிய திமுக கவுன்சிலர் நாகலட்சுமி தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றியப் பொருளாளர் பைரவசாமி, கிளைச்செயலாளர் ராஜ்குமார், காலனி செயலாளர் பாலமுருகன், வரதன், நாகராஜ், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.