பெரம்பலூர், அக்.2: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப் புணர்வுப் புத்தகத்தை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் வெளியிட்டார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் நேற்று (1ம் தேதி) காவல் நிலையத்தில் உள்ள குழந்தை நல அலுவலர்களுக்கு குழந்தைகளின் நல சட்டம் மற்றும் குழந்தைத் திருமணத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விழிப்புண ர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட (குழந்தை கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு) ஏடிஎஸ்பி நீதி ராஜ் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எவ்வாறு பிரச்னைகள் ஏற்படுகிறது எனவும், குழந்தைகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.