காரைக்காலில் மேலும் 76 பேருக்கு கொரோனா

காரைக்கால், அக்.1: நாடெங்கும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்திலும் வேகமாக பரவி வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை சுமார் 21,500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில், நேற்று முன்தினம் வரை 2,449 ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த 28ம் தேதிஎடுக்கப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2,525 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், பாதிப்பு எண்ணிக்கையில் 1,837 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் வீடுகளில் 643 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: