திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயர்புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ரஞ்சனி (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (31) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் கடந்த 20 மாதத்துக்கு முன்பு ஒரு கோயிலில் திருமணம் செய்து சசிகுமாரின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 17 மாதமாக வரதட்சணை கேட்டு ரஞ்சனியை சசிகுமார் கொடுமைப்படுத்தியுள்ளார். இவருக்கு உடந்தையாக அவரது தாயும் இருந்துள்ளார். இதனால் ரஞ்சனி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரஞ்சனியின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.