சென்னை: டெங்கு பரவாமல் தடுப்பதற்காக மருந்துகள் கண்டுபிடுக்கப்பட்டுள்ளதா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னையில் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்றும் சட்டவிரோதமாக பொது இடங்கள், சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த சட்டவிரோத வாகனங்களை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.